ஏஐ தொழில்நுட்பத்துக்கு அனிருத் ஆதரவு

இசை அமைப்பாளரும், பாடகருமான அனிருத் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘ரஜினிகாந்த் சார், கமல்ஹாசன் சார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரமோஷன் வீடியோவில் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. அது எனக்கும், இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும் ஒரு கனவு போல் இருந்தது. தமிழ்ப் படவுலகை தாண்டி பிறமொழிகளில் இசை அமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அப்பாடல்களை முதலில் தமிழில் உருவாக்குவேன். பிறகு மற்ற மொழிகளுக்கு மாற்றுவேன்.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இசை அமைப்பது சுலபமாகி விட்டது. தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். நாங்கள் அதை ‘வேட்டையன்’ படத்திலேயே பயன்படுத்தினோம். ரஜினிகாந்தின் அறிமுக பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவது வழக்கம். ‘பேட்ட’, ‘தர்பார்’ ஆகிய படங்களில் அவரை பயன்படுத்தினோம். ‘வேட்டையன்’ படத்தில் மலேசியா வாசுதேவன் குரலை பயன்படுத்த அவரது மகன் யுகேந்திரனிடம் அனுமதி கேட்டோம். அவர் சம்மதித்தவுடன், அந்த குரலையே பயன்படுத்தினோம். இப்போது ஏஐ தொழில்நுட்பம் மிக நேர்த்தியாக வளர்ந்து வருகிறது’ என்றார்.

 

Related Stories: