அஜித்தை சிம்பு சந்தித்தது ஏன்?

 

சமீபத்தில் துபாய் சென்றிருந்த சிம்பு, அங்கு கார் பந்தயத்தில் பிசியாக ஈடுபட்டிருந்த அஜித் குமாரை சந்தித்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘மலேசியாவில் நகைக்கடை திறப்பு விழாவுக்காக சென்றிருந்தேன். அந்த பாதையில்தான் அஜித் குமாரின் கார் ரேஸிங் நடந்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவரை சந்திக்காமல் போக வேண்டாம் என்று முடிவு செய்து, அவருக்கு தொந்தரவு இல்லை என்று தெரிந்தவுடன் போன் செய்தேன்.

அவர் வரச்சொன்ன பிறகே சந்தித்து பேசினேன். அதில் அவருக்கு அதிக சந்தோஷம். என்னிடம் பேச நேரம் இருந்ததால், கார் ரேஸிங் பற்றி விரிவாக சில விஷயங்களை சொன்னார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரை நேரில் சந்தித்து மனம்விட்டு பேசியதில் எனக்கும் அதிக சந்தோஷம் கிடைத்தது’ என்றார்.

Related Stories: