கன்னட படவுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரச்சிதா ராம் நடித்துள்ள ‘கல்ட்’, ’லேண்ட் லார்டு’ ஆகிய கன்னட படங்கள், வரும் 23ம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் அதிக உற்சாகம் அடைந்துள்ளனர். ‘கல்ட்’ படம், காதல் கதையுடன் கூடிய திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ‘லேண்ட் லார்டு’ படம், ஆக்ஷனுடன் கூடிய சமூக அம்சங்கள் கொண்ட கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரு படங்களிலும் முற்றிலும் மாறுபட்ட கேரக்டர்களில் ரச்சிதா ராம் நடித்துள்ளார்.
ஒரேநாளில் இரண்டு படங்கள் திரைக்கு வருவது, அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருவதுடன், எந்த படம் அதிக வரவேற்பை பெறும் என்ற விவாதமும் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘கூலி’ என்ற படத்தில் ரச்சிதா ராம் நடித்திருந்தார்.
