தெலுங்கு முன்னணி நடிகையும், தமிழில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காந்தா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவருமான பாக்யஸ்ரீ போர்ஸுக்கு இந்த ஆண்டு மேடு, பள்ளம் நிறைந்த ஆண்டாக அமைந்தது. கடந்த 2024ம் ஆண்டில் ‘மிஸ்டர் பச்சன்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானாலும், இந்த ஆண்டில் நிறைய படங்களில் நடித்து, தென்னிந்திய திரையுலகில் மிகவும் பரபரப்பான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். இந்த ஆண்டு அவர் நடித்த ‘கிங்டம்’, ‘காந்தா’, ‘ஆந்திரா கிங் தாலுகா’ ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இப்படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், பாக்யஸ்ரீ போர்ஸ் தனது யதார்த்தமான நடிப்பு மற்றும் அழகின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
வரும் 2026ல் நிறைய புதுப்படங்களில் அவர் நடித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்நிலையில் அவர் இந்த ஆண்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட பதிவில், ‘2025ம் ஆண்டு எனக்கு அன்பும், கற்றலும் நிறைந்த ஆண்டாக இருந்தது. குறிப்பாக, இந்த வருடத்துக்கு எனது மிகப்பெரிய நன்றியை சமர்ப்பிக்கிறேன். அன்பு, சிரிப்பு மற்றும் கற்றல்கள் நிறைந்த வருடமாக இருந்ததற்கும் நன்றி சொல்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் அகில் அக்கினேனி ஜோடியாக ‘லெனின்’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.
