அந்த வேலையை இந்த படம் செய்திருக்கிறது. சினிமாவில் இயக்குநர் தான் கடவுள் என்று நினைக்கிறேன். சில படங்களில் நான் நடித்திருப்பேன். ஆனால் தியேட்டரில் பார்த்தால் அப்படத்தில் இருக்க மாட்டேன். அதை நினைத்து சில நேரங்களில் வருத்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள், ஆனால் சாதிய பாகுபாடு மிக மோசமாக உள்ளது. நான் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நண்பர் என்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சிலர் என்னை நடிக்க அழைப்பதற்கு யோசிக்கிறார்கள்” என பகிரங்கமாக நடிகர் கலையரசன் பேசினார். தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த், நிர்வாகத் தயாரிப்பாளர் காந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
