பெங்களூரு: பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த ‘கேஜிஎஃப் 1’, ‘கேஜஎஃப் 2’ ஆகிய பான் இந்தியா படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்று வசூலிலும் சாதனை படைத்தன. இதையடுத்து இப்படங்களின் தொடர்ச்சியாக 3வது பாகம் உருவாகும் என்று தகவல் வெளியானது. இதுபற்றி யஷ் கூறியதாவது: தற்போது 2 படங்களில் நடிக்கிறேன்.
அப்படங்களை முடித்த பிறகு ’கேஜிஎஃப் 3’ படம் உருவாகும். அதற்கான சூப்பர் ஐடியா எங்களிடம் இருக்கிறது. நானும், பிரசாந்த் நீலும் அதுபற்றி அடிக்கடி விவாதித்து வருகிறோம். அதே சமயம் இந்த படத்தால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. மக்களை என்டர்டெயின் செய்ய வேண்டும் என்ற நோக்கமே உள்ளது.