பாலியல் வழக்கு பதிவு: வங்கதேச நடிகை திடீர் கைது

தானே: வங்கதேச நடிகை ரியா அரவிந்த் பார்டே என்ற ஆரோஹி, மகாராஷ்டிர மாநிலம் தானேயில் தங்கிஇருந்தார். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உல்லாஸ் நகரில் இருக்கும் ஹில் லைன் போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோதமாக தங்கி இருந்த ரியா அரவிந்த் பார்டேவை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ரியா அரவிந்த் பார்டேயின் ஆவணங்களில், அவரது பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டில் வெவ்வேறு பிறந்த இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சிலவற்றில் மேற்குவங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ், சில ஆவணங்களில் ஹூக்ளி மற்றும் அமரா வதி மாவட்டத்தின் அச்சல்பூர் பகுதி என்று முரணாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அவரது தாயார் மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த அரவிந்த் பார்டே என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதனால், அடிக்கடி ரியா அரவிந்த் பார்டே இந்தியாவுக்கு வந்து செல்வார். தற்போது அவரது பெற்றோர் கத்தாரில் வசிக்கின்றனர். ரியா அரவிந்த் பார்டே மீது மோசடி மற்றும் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது’ என்றனர். ஷில்பா ஷெட்டி கணவருடன் தொடர்பு பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் ரியா அரவிந்த் பார்டே பணிபுரிந்துள்ளார். இதனால் அவருக்கும், ராஜ் குந்தராவுக்கும் இடையிலுள்ள ெதாடர்புகள் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இதையடுத்து ராஜ் குந்த்ரா வெளியிட்ட அறிக்கையில், ‘என்னைப் பற்றி தவறான குற்றச்சாட்டுகளை சிலபேர் பரப்புவதால் அதிக வருத்தம் அடைந்தேன். சட்டவிரோதமாக இந்தியாவில் நுழைந்த ஒருவர், எனது படத்தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்று சொல்வது அபத்தமானது. இந்த நபரை (ரியா) நான் சந்தித்தது கிடையாது. அவருக்கும், எங்கள் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. இவ்விவகாரத்தில் அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

The post பாலியல் வழக்கு பதிவு: வங்கதேச நடிகை திடீர் கைது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: