நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்; ஜேஎஸ்கே பேட்டி

சென்னை: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ‘வாழை’ திரைப்படத்தில் வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.எஸ்.கே. அவர் கூறியது: வாழை படத்தில் சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கும், திரைப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும், தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் மாஸ்டர் அவர்களுக்கும் ‘வாழை’ படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து ‘அக்னி சிறகுகள்’, ‘யாருக்கும் அஞ்சேல்’, ‘சம்பவம்’, ‘சேவியர்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறேன். இது தவிர, பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன் நடிக்கும் ‘ஃபயர்’ படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறேன். இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது. நடிப்பதற்காக நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் நல்ல இயக்குநர்களின் சிறந்த கதைகளில் சிறப்பான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். மலையாள திரைத் தறையில் இருந்தும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

 

The post நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன்; ஜேஎஸ்கே பேட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: