தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் சூரி

சென்னை: தமிழில் காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது அவரை காமெடி வேடத்தில் நடிக்க யாரும் அழைக்கவில்லை. எனவே, மீண்டும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை 2’ என்ற படத்தில் நடித்து வரும் சூரி, அடுத்து ‘புரூஸ்லீ’ படத்தின் இயக்குனரும், ‘விலங்கு’ என்ற வெப்சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவருமான பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இதையடுத்து வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் சூரி நடிக்கிறார். இப்படத்தை ‘செல்ஃபி’ படத்தின் டைரக்டர் மதிமாறன் இயக்குகிறார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் தனது மேனேஜர் குமார் தயாரிப்பில், ‘கருடன்’ படத்தை தொடர்ந்து பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூரி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் சூரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: