சோதனைசாவடிகளில் வாகனங்களில் வருபவர்களிடம் சோதனை செய்து அவர்கள் எடுத்து வந்த தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பறிமுதல் செய்ததோடு, தொரப்பள்ளி கக்கனல்லா சோதனைசாவடி பகுதிகளில் புலி முகத்துடன் கூடிய முகமூடிகள் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிட பள்ளி மற்றும் அல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் புலிகள் பாதுகாப்பு குறித்த உரையாற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிகளில் வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
The post முதுமலை காப்பகத்தில் சர்வதேச புலிகள் தினவிழா appeared first on Dinakaran.
