கேரளாவில் பலத்த மழை: தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளா முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்ததில் வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன. நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கன மழைக்கு 3 பேர் பலியானார்கள்.

கண்ணூர் சூடாட்டில் கடலில் பைபர் படகு கவிழ்ந்து கன்னியாகுமரியை சேர்ந்த ஆன்டனி என்ற மீனவர் உயிரிந்தார். 4 மீனவர்கள் காயமடைந்தனர். கண்ணூர் கூத்துபறம்பு பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்து சந்திரன் என்பவர் இறந்தார். இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்து தமிழ்நாடு தேவாரம் பகுதியை சேர்ந்த பெண் தோட்ட தொழிலாளி லீலாவதி இறந்தார்.

The post கேரளாவில் பலத்த மழை: தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: