இந்நிலையில், அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை என்று பாமக வழக்கறிஞர் கே.பாலு சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பாமக வழக்கறிஞர் கே.பாலு கூறுகையில்; மருத்துவர் ராமதாஸ் அளித்த புகார் மனுவை மட்டுமே அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் டிஜிபி அலுவலகம் அனுப்பி உள்ளது. செங்கல்பட்டு உத்திரமேரூரில் அன்புமணியின் நடைப்பயணம் திட்டமிட்டப்படி நடைபெறும். அன்புமணியின் நடைப்பயணம் பெரும் வெற்றியை பெறும். தமிழக அரசியலில் அன்புமணியின் நடைப் பயணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். அன்புமணியின் நடைப் பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என டிஜிபியிடம் ராமதாஸ் மனு கொடுத்திருந்தார்.
The post அன்புமணியின் நடைபயணத்துக்கு காவல்துறை தடை விதிக்கவில்லை: வழக்கறிஞர் கே.பாலு விளக்கம் appeared first on Dinakaran.
