தமிழகத்தில் இன்றும், நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: தமிழகத்தில் இன்றும் (ஜூலை 24), நாளையும் (ஜூலை 25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை ஆகிய மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,
நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் (ஜூலை 24), நாளையும் (ஜூலை 25) கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

The post தமிழகத்தில் இன்றும், நாளையும் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: