முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்; 2 நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்; 2 நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக ஜூலை 21ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதல்வர் மருத்துவகண்காணிப்பில் உள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில், இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்; 2 நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்: அப்போலோ மருத்துவமனை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: