அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தனியார் வங்கிகள் அலட்சியம்: ஒன்றிய அரசு அதிருப்தி

டெல்லி: ‘ஜன் தன் யோஜனா’ உள்ளிட்ட அரசு நிதிச்சேவை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தனியார் வங்கிகள் அலட்சியம் என ஒன்றிய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. ஜன் தன் யோஜனா, ஜீவன் ஜோதி யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா திட்டங்களில் அலட்சியம்.

வங்கி, நிதிச் சேவைகள் எட்டாத மக்களுக்கும் அவை கிடைக்கச் செய்யும் நோக்கில், மத்திய அரசு ஜன் தன் வங்கிக் கணக்குகள், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முத்ரா கடன் திட்டத்தில் தனியார் வங்கிகள் பங்களிப்பு 24% மட்டுமே என ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தில் தனியார் வங்கிகள் பங்களிப்பு 23% மட்டுமே என ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், தனியார் துறை வங்கிகளின் செயல்பாடுகள், திருப்திகரமாக இருப்பது போல தெரியவில்லை.

The post அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தனியார் வங்கிகள் அலட்சியம்: ஒன்றிய அரசு அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: