இந்த மனுக்கள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. ரவி மோகன் தரப்பு வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன், அடுத்த படத்தில் நடிக்கும் போது பணத்தை திரும்ப அளிப்பதாக கூறியதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை. அதனால் அவர் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்தவில்லை என்று கூறினார்.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர், தனது மனைவி உடனான பிரச்னையின் போது, வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறிக்கை வெளியிட்ட நடிகர் ரவி மோகன், தற்போது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தங்கள் நிறுவனம் அளித்த முன் பணத்தை கொண்டு ரவி மோகன் தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் என்று வாதிட்டனர்.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான இந்த பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தரை நியமிப்பதாக தெரிவித்த நீதிபதி, 9 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும், வேறு படங்களை வெளியிடவும் பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு தடை விதிக்கக்கோரி ரவி மோகன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தை தாக்கல் செய்யுமாறு ரவி மோகனுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.
The post நடிப்பதற்காக பெற்ற முன்பணத்தை திரும்ப தரக்கோரி வழக்கு ரூ.5.9 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
