ஆனால் பாதுகாப்பு வசதிகள் கொண்ட எரிபொருள் சுவிட்ச் எப்படி கட்-ஆப் நிலைக்கு சென்றது என்பது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட போயிங் 787,737 ரக விமானங்களின் எஞ்சின் எரிபொருள் சுவிட்சுகளை கட்டாயமாக்க ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. இந்த ஆய்வு பணிகளை முடித்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. போயிங் 787, போயிங் 737 விமானத்தில் எரிபொருள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் நடந்த சோதனையில் எந்த பிரச்சனையும் இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
The post போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச் அமைப்புகளில் பிரச்சினை இல்லை : ஏர் இந்தியா நிறுவனம் appeared first on Dinakaran.
