வடமாநில தொழிலாளி தற்கொலை

 

திருப்பூர், ஜூலை 22: பீகாரை சேர்ந்தவர் பிஜய்குமார் யாதவ் (40). இவருக்கு, திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் திருப்பூர், கனியாம்பூண்டி பகுதியில் உள்ள பனியன் நிறுவன விடுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பிஜய்குமார் யாதவ் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லவில்லை. மாலையில் நண்பர்கள் வந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வடமாநில தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: