- தேவாரம்-கோம்பை சாலை
- தேவாரம்
- தேவாரம்-கோம்பை நெடுஞ்சாலை
- கோம்பை
- மேலசிந்தலைசேரி
- தம்மிநாயக்கன்பட்டி
- லட்சுமி நாயக்கன்பட்டி
- தின மலர்
தேவாரம், ஜூலை 21: தேவாரம் – கோம்பை நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் மணல் சேர்ந்து குவியல்களாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தேவாரம், கோம்பை, மேலசிந்தலைசேரி, தம்மிநாயக்கன்பட்டி, லட்சுமி நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் அதிக அளவில் மணல் சேர்ந்து குவியல்களாக கிடக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. வேகமாக வரும் டூவீலர்கள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதனால் இந்த மணல் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தேவாரம் – கோம்பை சாலையில் மணல் குவியலால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.
