திருத்தணி, ஜூலை 20: திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 15வது மானிய குழு திட்டத்தின் கீழ் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகளை திருமுல்லைவாயல் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ முன்னிலையில் காணொலியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளுக்கு நடைபெற்ற பூமிபூஜையில் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் மேம்படுத்தும் வகையில் புதிய கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
The post அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் appeared first on Dinakaran.
