இதுகுறித்து விசாரிக்காமல், அவரை சஸ்பெண்ட் செய்வது எவ்விதத்திலும் நியாயம் அல்ல. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட டிஎஸ்பிக்கு நியாயமும், நீதியும் வழங்க வேண்டும். அதிமுக -பாஜ கூட்டணியில் சர்ச்சை எதுவும் இல்லை. ஒரு நோக்கத்திற்காக, ஒரே புள்ளியில் தே.ஜ கூட்டணியாக இணைந்துள்ளோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைவர்கள் பேசுவார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதை அறிவித்து விட்டோம். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
The post கூட்டணியில் சர்ச்சை இல்லை: சொல்கிறார் அண்ணாமலை appeared first on Dinakaran.
