×

தஞ்சை மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஜுலை 19: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், அனைத்து துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கைகளை மனுவாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கி பயன்பெறலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சை மாவட்டத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,District Collector ,People's Grievance Redressal Hall ,Thanjavur District Collectorate Office ,Complex… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...