போலீஸ் வாகனங்கள் நிலை குறித்து எஸ்.பி ஆய்வு

 

திருப்பூர், ஜூலை 18: திருப்பூர் மாவட்ட டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனம் உட்பட, 50 வாகனங்களின் தகுதி குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்களின் வாகனங்கள், ரோந்து டூவீலர், ‘பேட்ரோல்’ வாகனம் உட்பட வாகனங்களின் தகுதி குறித்து ஆய்வு மாதந்தோறும் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம்.அதன்படி, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், ‘ஹைவே ரோந்து’ வாகனம் உட்பட, 50 வாகனங்களின் தகுதி குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நேற்று பரிசேதானை செய்யப்பட்டது.

எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஒவ்வொரு வாகனங்களின் தற்போதைய நிலை குறித்தும், வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கூறினார். தொடர்ந்து, வாகனங்களின் தகுதி, உதிரிபாகங்களின் நிலைமை உள்ளிட்ட அனைத்தையும் பார்வையிட்டனர். முதல்கட்டமாக, 50 வாகனங்கள் பரிசோதனை முடிந்தது. இரண்டாம் கட்டமாக வரும், 20 ம் தேதி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மீதமுள்ள, 30 வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

The post போலீஸ் வாகனங்கள் நிலை குறித்து எஸ்.பி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: