திருப்புத்தூர், ஜூலை 18: மதுரை மாவட்டம் மூடுவார்பட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் திருப்புத்தூர் அருகே உள்ள அருளிக்கோட்டையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கி உள்ளார்.
சக ஊழியர்கள் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ஆறுமுகம் வீட்டில் உத்திரத்தில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து ெகாண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்த ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கொத்தனார் தற்கொலை appeared first on Dinakaran.
