இதனிடையே, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்தும் அவர்கள் தொடர்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளை (17ம் தேதி) நீட்டித்து வழங்கும்படி வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து வரும் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின்படி தொடர்புடைய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆணையரிடம் வரும் 31ம் தேதி மாலை 3 மணி வரை விண்ணப்பம் செய்யலாம்.
The post உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவி மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அவகாசம் appeared first on Dinakaran.
