×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் சிவப்பு நிற சால்வியா மலர்கள்


ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் சிவப்பு நிற சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் முதல் சீசன் அனுசரிக்கப்பட்டது. இதற்காக பூங்கா முழுவதிலும் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவை பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கியது. இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் சென்றனர். முதல் சீசன் முடிந்த நிலையில், கடந்த மாதம் பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் அகற்றப்பட்டன. அதேபோல் தொட்டிகளில் உள்ள மலர் செடிகளும் அகற்றப்பட்டது.

இதனால் பூங்காவில் பெரும்பாலான மலர் செடிகளில் தற்போது மலர்கள் இன்றி காட்சியளிக்கின்றன. இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் துவங்க உள்ள 2வது சீசனுக்காக பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. இருப்பினும், பூங்கா முழுவதிலும் சிவப்பு நிற சால்வியா மலர்கள் பூத்துள்ளன. இந்த மலர் செடிகளை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டுரசித்து செல்வதுடன், அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். ஊட்டியில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் பூங்கா புல் மைதானங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் சிவப்பு நிற சால்வியா மலர்கள் appeared first on Dinakaran.

Tags : Ooty Botanical Garden ,Ooty ,Ooty Government Botanical Garden ,Dinakaran ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்