சென்னை: மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து திருமாவளவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திமுகவை எதிர்ப்பவர்கள் இன்னும் கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. திமுக தலைமையில் ஒரு கூட்டணி வலுவாக உள்ளது; திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக்கிடக்கின்றன. தேர்தல் தொடர்பான விதிகளை இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடுவதை போல தமிழிழும் வழங்க வேண்டும். தேசிய அளவில் இணைந்து செயல்பட வேண்டிய தேவை குறித்து கமல்ஹாசனிடம் பேசினேன் என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
The post மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து appeared first on Dinakaran.