புதுச்சேரி, ஜூலை 17: புதுச்சேரி அடுத்த பங்கூர் பாண்டி- விழுப்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிவண்ணன் (45). புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், தனது காரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் அடையாளம் தெரியாத 2 பேர் அங்கு வந்து அவரது கார் கண்ணாடியை கற்களால் சரமாரி அடித்து உடைத்துள்ளனர்.
இதில் காரின் முன்பகுதி, பின்பகுதி கண்ணாடிகள் உடைந்தது. மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் மர்ம நபர்கள் அடித்து சேதப்படுத்தினர். இவற்றின் மொத்த சேத மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். இதுகுறித்து வழக்கறிஞர் மணிவண்ணன் அளித்த புகாரின்பேரில், வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் கண்ணாடி மற்றும் சிசிடிவி கேமராவை அடித்து உடைத்து சேதப்படுத்திய 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
The post நள்ளிரவில் வழக்கறிஞரின் கார் கண்ணாடி, சிசிடிவி கேமரா உடைப்பு appeared first on Dinakaran.
