அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் புதிய ஆடைகள் அணிந்து, பெற்றோருடன் வந்து இருந்தனர். ஆனால் வெகுநேரமாகியும் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ வரவில்லை. அவரை தொடர்பு கொண்டபோது இன்று அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டாம். மேலும் ஆடி மாதம் குழந்தைகளை புதிய கட்டிடத்திற்குள் விடவேண்டாம். அதுக்கு அடுத்த மாதம் ஆவணியில் ஒருநாள் அங்கன்வாடி கட்டிடத்தை திறக்கலாம் என கூறினார். இதனை தொடர்ந்து அங்கு வந்த குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
The post ஆடி மாசம் ஆகாதாம்… அங்கன்வாடி மையத்தை திறக்க வராத பாஜ எம்எல்ஏ appeared first on Dinakaran.
