45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 50 அரசு மருத்துவமனைகளில் ரூ.160 கோடியில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் அறிவித்ததன் அடிப்படையில் முதல்கட்டமாக ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபப்ட்டுள்ளது. கோவை, திண்டுக்கல், குமரியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்படும். கரூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட உள்ளது.

The post 45 அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டடங்கள் கட்ட ரூ.130 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: