சென்னை : மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜூலை 8ம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஜூன் மாதம் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்த நிலையில் தற்போது அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
The post மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் : ஜூலை 8ம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு!! appeared first on Dinakaran.
