பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரம் மாநகராட்சிக்கு பூச்செடிகள் வழங்கி நூதன ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், ஜூலை 16: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, நெருப்பெரிச்சல், ஜி.என். கார்டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வழிபாட்டு தலங்கள், பதிவுத்துறை அலுவலகம், வணிக வளாகங்கள் ஆகியவை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து அனைத்து கட்சினர் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம், கடை அடைப்பு, குப்பை லாரி சிறை பிடித்தல், வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் என அரசின் கவனத்திற்கும், மாநகராட்சியின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில். தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் பாறைக்குழிக்குள் குப்பை கொட்டி நீர், காற்று, மண்ணை மாசுபடுத்தும் திருப்பூர் மாநகராட்சிக்கு பூச்செடிகள் பரிசாக கொடுத்து நேற்று மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதற்கு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சிகாமணி தலைமை வகித்தார். குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சாந்தி, வெங்கடேஷ், சிதம்பரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ஏராளாமானோர் கலந்து கொண்டு கையில் பூச்செடிகளை ஏந்தி மாநகராட்சியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

The post பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரம் மாநகராட்சிக்கு பூச்செடிகள் வழங்கி நூதன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: