சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான நடிகர் கமல்ஹாசன், வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளார். இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். கமல்ஹாசன், வருகிற 25ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்கிறார் appeared first on Dinakaran.