இதை தொடர்ந்து இறந்த குழந்தையின் பெற்றோர் கஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுத்த மருத்துவ சிகிச்சை கோளாறு காரணமாக தன்னுடைய குழந்தை இறந்துவிட்டதாக குற்றசாட்டு வாய்த்த நிலையில், கஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உஷாதேவி ஏற்கனவே இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் இருந்ததால் 4 வது குழந்தையை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் தலைமையில் பிரேத பரிசோதனை நிபுணர் பாலாஜி தலைமையிலான மருத்துவ குழு மற்றும் காவல்துறை சார்ந்த அதிகாரிகள் 11 மாத குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். பிரேத பரிசோதனையில் மாதிரிகளை சேகரித்த தடய அறிவியல் ஆய்வு கூடத்திற்கு கொண்டு செல்ல உள்ளனர்.
The post திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே 11 மாத பெண் குழந்தையை பெற்றோரே கொலை செய்ததாக புகார்..!! appeared first on Dinakaran.
