7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது: சாய்னா நேவால் – காஷ்யப் தம்பதி விவாகரத்து!!

தனது கணவர் காஷ்யப்பை பிரிவதாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் அறிவித்துள்ளார். சாய்னா நேவால் – பருப்பள்ளி காஷ்யப் தம்பதியினரின் 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்ட அறிவிப்பில், இருவரும் ஒவ்வொருவரும் அமைதியான வாழ்க்கையைத் தேர்வு செய்வதாகக் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் அவரது கணவர் பருபள்ளி காஷ்யப் விவாகரத்து செய்து கொண்டனர். சாய்னா நேவால் நேற்று இரவு (ஜூலை 13) சமூக ஊடகங்களில் பருபள்ளி காஷ்யப்பை விவாகரத்து செய்ததாக பதிவிட்டு தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சாய்னாவும், பருபள்ளியும் டிசம்பர் 14, 2018 அன்று திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இருவரும் பிரிய முடிவு செய்துள்ளனர். ஹரியானாவின் ஹிசாரில் பிறந்த சாய்னா, காஷ்யப்பை விட 3 வயது இளையவர். திருமணத்தின் போது பாருபள்ளிக்கு 31 வயது, சாய்னா நேவாலுக்கு 28 வயது. 30 வயதில் சாய்னாவும் அரசியலில் நுழைந்தார், சாய்னா 2020ல் பாஜக கட்சியில் சேர்ந்தார்.

விவாகரத்து குறித்து சாய்னா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நிறைய யோசித்த பிறகு, பருபள்ளி காஷ்யப்பும் நானும் பிரிய முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் இருவரும் நமக்கும் ஒருவருக்கொருவர் அமைதி, முன்னேற்றம் மற்றும் ஓய்வுக்கான பாதையைத் தேர்வு செய்கிறோம். இந்த நினைவுகளுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் எதிர்காலத்திற்கு உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

The post 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது: சாய்னா நேவால் – காஷ்யப் தம்பதி விவாகரத்து!! appeared first on Dinakaran.

Related Stories: