பண மோசடி வழக்குகளுக்காக 16 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்: அமலாக்கத்துறை அறிவிப்பு

புதுடெல்லி: அமலாக்கத்துறை, “பண முறைகேடு வழக்கு விசாரணைகளை விரைந்து முடிப்பதில் உள்ள சவால்கள்” என்ற தலைப்பில் வருடாந்திர ஆய்வறிக்கையை அண்மையில் வௌியிட்டிருந்தது. அதில், “பண மோசடி வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிப்பதற்கான நடைமுறைகளை பண மோசடி தடுப்பு சட்டம் தெளிவாக வகுத்திருந்தாலும், அதை நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து முடிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

இதனால் ஏற்படும் காலதாமதம் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துகிறது. நாடு முழுவதும் 100 சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தும் விசாரணை தாமதமாகிறது” என தெரிவித்திருந்தது. இந்நிலையில் 16 பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமலாக்க இயக்குநரகம் நேற்று வௌியிட்ட அறிவிப்பில், “தெலங்கானா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட மாநிலங்களில், தலா இரண்டு உள்பட மொத்தம் 16 பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பண மோசடி வழக்குகளுக்காக 16 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்: அமலாக்கத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: