மேலும் பல்வேறு மன அழுத்தங்களால் பாதிக்கப்படும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறுகிறது. இந்தச் சூழலில், ராஜஸ்தானின் கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், ‘நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள், மாணவர்களின் திறமைகளை வேட்டையாடும் கூடங்களாக மாறிவிட்டன. அவை நம்முடைய இளைஞர்களின் எதிர்காலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
இந்த மையங்கள் தங்களது உள்கட்டமைப்பைத் திறன் மேம்பாட்டு மையங்களாக மாற்ற வேண்டும். இந்த மனப்பாடக் கலாசாரம், பயனில்லா பட்டங்களையும், அர்த்தமில்லாத நினைவுகளையும் மட்டுமே உருவாக்கும். மேலும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான செயலாகும். இனிமேல் ராணுவத்தை கொண்டு நாடுகளைக் காலனிப்படுத்த முடியாது; தொழில்நுட்பத்தில் தலைமை ஏற்பதே புதிய தேசப்பற்றாக இருக்க முடியும். இந்திய இளைஞர்கள், இந்திய மக்களுக்காக சாதனைகளை படைத்து அதனை உலகமயமாக்க வேண்டும்’ என்று கூறினார்.
The post மாணவர்களின் திறமையை வேட்டையாடும் நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள்: கடுமையாகச் சாடிய துணை ஜனாதிபதி appeared first on Dinakaran.
