எனவே, தனி விசாரணை அதிகாரி வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளேன். நாங்கள் ரிதன்யாவிற்கு கொடுத்த நகையை இன்னும் எங்களுக்கு தரவில்லை. ஆதாரங்கள் திரட்டி விட்டு நீதிமன்றம் மூலமாக எங்களுக்கு தருவதாக தெரிவித்துள்ளார்கள். ரிதன்யா தற்கொலை சம்பவம் போன்று இந்தியாவில் எங்கும் நடக்கக்கூடாது. 27 வயது பெண்ணை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. உங்கள் வீட்டு குடும்பம், தங்கச்சியாக இருந்தால் இப்படி சமூக வலைதளங்களில் போடுவீர்களா? சரியான தகவலை போடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post அவிநாசி புதுப்பெண் தற்கொலை விசாரணை அதிகாரியை மாற்ற கோரி ஐஜியிடம் தந்தை மனு appeared first on Dinakaran.
