தென்னிந்தியாவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற கவலை உள்ளது. அதற்கு காரணம் மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள்தான். ஒரு காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு என்று சொன்னோம். ஆனால் இப்போது மக்கள் தொகை மேலாண்மை என்று சொல்கிறோம். கூட்டுக் குடும்பங்கள் மீண்டும் வர வேண்டும். பெரிய குடும்பங்களை ஊக்குவிக்க திட்டங்கள் கொண்டு வரப்படும். மக்கள் தொகை நமக்கு ஒரு பெரிய சொத்து. தற்போது பல நாடுகளில், முதியவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இனிமேல், எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்திற்காக மக்கள் தொகை மேலாண்மைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post மக்கள் தொகை கட்டுப்பாட்டால் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும்: ஆந்திர முதல்வர் கவலை appeared first on Dinakaran.
