அதிநவீன மருத்துவ உபகரண வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த புதிய 4 மாடி மாவட்ட அரசு மருத்துவமனை கட்டிடத்தில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இங்கு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப ஓரிரு நாட்களில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து கோரிக்கை விடுப்பதாக எஸ்.சந்திரன் எம்எல்ஏ தெரிவித்தார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தேவன், உதவி செயற்பொறியாளர் முரளி, தலைமை மருத்துவ அலுவலர் விஜய் ஆனந்த், மருத்துவ அலுவலர் அம்பிகா சண்முகம் நகர திமுக செயலாளர் வி.வினோத்குமார், நகர துணை செயலாளர் ஜி.எஸ்.கணேசன், நகர பொருளாளர் டி.எஸ்.ஷியாம்சுந்தர், மாவட்ட பிரதிநிதி கே.எஸ்.அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ரூ.45 கோடி மதிப்பில் திருத்தணியில் புதிதாக கட்டப்பட்ட மருத்துவமனையில் சேவை துவக்கம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வரவேற்பு appeared first on Dinakaran.
