சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: உலக மக்கள்தொகை நாளில், ஒன்றிய அரசுக்கு ஒரு நினைவூட்டல்: தமிழ்நாடு மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது. பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது. ஆனால், பதிலுக்கு நமக்கு கிடைப்பது என்ன?. குறைவான மக்களவைத் தொகுதிகள். குறைவான நிதி ஒதுக்கீடு. நாடாளுமன்றத்தில் இருந்து ஒதுக்கப்படும் நமது குரல். ஏன்? ஏனென்றால், தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது. இதைவிட மோசம் என்ன என்றால், பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்கு துணைபோகிறார்கள். நாம் எட்டிய வளர்ச்சிக்காக நம்மை தண்டிக்கும் அநியாயமான தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறார்கள். தெளிவாகச் சொல்கிறேன்: தமிழ்நாடு உங்களுக்கு அடிபணியாது. நாங்கள் ஒருமித்து எழுவோம்! இது டெல்லி அணிக்கு எதிரான ஓரணி! நமது மண், மொழி, மானம் காக்க இணைவீர் ஓரணியில் தமிழ்நாடு.
The post ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அடிபணியாது நமது மண், மொழி, மானம் காக்க ஓரணியில் இணைவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.