குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு தினம்; தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர். சமூகநீதி தளத்தில் பெரியார், அண்ணா, கலைஞர் என திராவிட இயக்கத்துக்கு துணையாக நின்ற மாண்பாளர். சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தி பாராட்டிய ‘குன்றக்குடி கிராமத் திட்டம்’ கொண்டுவந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர். பகட்டு சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனிதநேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர். இந்தி எதிர்ப்பு போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர்.

கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக பேசிய பெருந்தகையாளர். தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45வது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க; அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்.

The post குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: