எனக்கு கல்வி என்றால் மிகவும் பிடிக்கும். கல்வி என்பது எனது உயிர்மூச்சு. அதிகளவு கல்லூரி, பல்கலைக்கழகம் துவங்கியது அதிமுக ஆட்சியில் தான். இந்தியாவிலே அதிமுக தான் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தது. 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். இதனால் 2,800 மாணவர்கள், அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்புகளை படித்துள்ளனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதி குறையாது என மத்திய அமைச்சர் கூறிவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார். எடப்பாடி பேசுகையில், வானூர் தொகுதியில் அதிமுக சார்பில் நின்றாலும், கூட்டணியில் நின்றாலும் வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். இனால், அவருக்கு அருகில் நின்றிருந்த சிட்டிங் அதிமுக எம்எல்ஏ சக்கரபாணி மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
The post கல்வி என்பது எனது உயிர் மூச்சு: எடப்பாடி பேச்சு appeared first on Dinakaran.
