மேலும், ‘பூமியில் இருந்து 250 மைல்களுக்கு மேலே இருந்தவாறு விண்வெளி வீரர்கள் 60க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். ஏராளமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து, தங்கள் அன்பார்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்கள்’ என கூறப்பட்டு இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்த நாட்களில் 230க்கு மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், சுமார் 1 கோடி அதாவது 96.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்திருப்பதாகவும் ஆக்சியம் கூறியுள்ளது. மேலும் சுபான்ஷு சுக்லா வருகிற 14ஆம் தேதி பூமி திரும்புவார் என்று நாசா அறிவித்து உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து புறப்படும் அவர்களது விண்கலம், சில மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கலிபோர்னியா கடற்கரைக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு 14ம் தேதி பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா appeared first on Dinakaran.
