இந்தச் சூழலில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சட்டப்பேரவையில் ‘மகாராஷ்டிர பொதுப் பாதுகாப்பு மசோதா 2024’-ஐ அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா, வன்முறையைத் தூண்டும், அரசைச் சீர்குலைக்க முயற்சிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, வழக்கு தொடர்வதற்கு முன்பு, உயர் நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு வழக்கறிஞர் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஆணையம் வழக்கை ஆய்வு செய்யும் என்ற முக்கிய அம்சம் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ வினோத் நிகோலே எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இந்த மசோதா பேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. எனவே மேற்கண்ட புதிய சட்டத்தின்படி நக்சல் ஆதரவு சித்தாந்தங்களை பரப்பினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உபா சட்டத்தை காட்டிலும் கடுமையான விதிகள் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இந்த சட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
The post உபா சட்டத்தை காட்டிலும் வலிமையான சட்டம்; நக்சல் ஆதரவு சித்தாந்தத்தை பரப்ப தடை: மகாராஷ்டிராவில் புதிய மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.
