இந்நிலையில், மாநில அரசின் இந்த உத்தரவுகளை எதிர்த்து பிவிஆர், பிக்கி-மல்டிபிளக்ஸ் சங்கம் மற்றும் புக் மை ஷோ நிறுவனம் ஆகியவை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.சோனக் மற்றும் ஜிதேந்திர ஜெயின் அடங்கிய அமர்வு, ‘கேளிக்கை கட்டணம் வசூலிக்கத் தடை விதிப்பதற்கு, மாநில அரசின் கேளிக்கை வரிச் சட்டத்தின் கீழ் எந்தவித சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை; எனவே ஏற்கனவே மாநில அரசு பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்கிறோம். மேலும், மாநில அரசு பிறப்பித்த இந்தத் தடை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் வர்த்தகம் மற்றும் தொழில் செய்யும் உரிமையை மீறுவதாகும். ஆன்லைனில் முன்பதிவு செய்வதா அல்லது திரையரங்கிற்கு நேரடியாகச் சென்று டிக்கெட் வாங்குவதா என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளது’ என்று தனது தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், மகாராஷ்டிராவில் இனிமேல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவிற்கு கேளிக்கை கட்டணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
The post ஆன்லைனில் சினிமா டிக்கெட் புக் செய்யும் போது கேளிக்கை கட்டணம் வசூலிக்கலாம்: மும்பை ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.
