சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4(குரூப் 4) பணிகளில் அடங்கிய வனக் காவலர் மற்றும் வனக்காப்பாளர் பதவிக்கான உடற்தகுதித்தேர்வு மற்றும் நடை சோதனை வருகிற 14ம் தேதி மற்றும் 15ம் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இத்தகவல் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள குறிப்பாணையை பதிவிறக்கம் செய்து குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட இடத்தில் உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைசோதனையில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வனக்காவலர், வனக்காப்பாளர் பணிக்கு உடற்தகுதி, நடை சோதனை தேர்வு: வரும் 14, 15ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.
