கடந்த மார்ச் மாதம் சூதாட்ட செயலிகளில் விளம்பரப்படுத்தியதாக நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவர்கொண்டா நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, ஸ்ரீமுகி, பிரணிதா, வர்ஷினி, வசந்தி, கிருஷ்ணன் மற்றும் சில யூ டியூபர்கள் என 29 பேர் மீது ஒன்றிய அரசின் ஐ.டி சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. தெலுங்கானா மாநில அரசிலும் , ஐதராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் மன்னிப்பு வீடியோ வெளியிட்டிருந்தனர். இருந்தபோதிலும் தற்போது இந்த சூதாட்ட வழக்கில் திரைபிரபலங்கள், யூ டியூபர்கள் என 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. ஐதராபாத் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
The post சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.
