இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அனைத்து அரசு ஊழியர்களும் நேற்று பணிக்கு வந்திருந்தனர். இந்தியா கூட்டணியினர் அண்ணாசிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மறைமலை அடிகள் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
The post புதுவையில் பந்த் மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.
