பாஜவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா, நாங்கள் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார். திமுக குறைந்தபட்ச செயல் திட்டம் என்று ஒரு நிபந்தனையுடன் கூட்டணி வைத்தது. அதிமுக என்ன செயல் திட்டத்துடன் கூட்டணி வைத்து உள்ளீர்கள். நீட் ரத்து, பள்ளிக்கல்வி துறைக்கு நிறுத்தி வைத்த நிதியை வழங்க வேண்டும். கீழடி குறித்த செயல் திட்டம் என்ற நிபந்தனைகள் ஏதாவது வைத்தீர்களா? நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானம் சட்டத்தை, முதல்வர் கொண்டு வந்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த விட மாட்டேன் என்று கூறும், பாஜவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தமிழ்நாடு மாணவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் தான், அதற்கு பொறுப்பு. இப்போது நீட் தேர்வு பிரச்னையில் நீதிமன்றத்தை அணுகப் போகின்றனர்.
The post திமுக ஆட்சியில் விகிதாச்சாரம் குறைவுதான் அதிமுக ஆட்சியில் கஞ்சா, கொலை வழக்குகளே பதிவாகவில்லையா? செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.
